Thursday, 31 July 2014
Friday, 25 July 2014
சர்க்கரை நோயை கட்டுப்பாட்டுடன் வைக்காவிடில் சந்திக்கக்கூடிய பெரும் ஆபத்துக்கள்!!!
இன்றைய காலத்தில் பெரும்பாலான மக்கள் சந்திக்கும் ஒரு ஆரோக்கிய பிரச்சனை தான் நீரிழிவு என்னும் சர்க்கரை நோய். சர்க்கரை நோய் என்பது இரத்தத்தில் சர்க்கரையின் அளவானது அதிகம் இருப்பதாகும். இப்படி இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது, அதற்கான அறிகுறிகள் உடலில் தென்படும்.
Read more »
Thursday, 24 July 2014
பொலிவான முகத்துக்கு எளிதான குறிப்புகள்
முல்தானிமெட்டி பவுடரை பன்னீர் விட்டு கலந்து முகத்தில் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பொலிவாக, முகப்பருக்கள் மறையும்.
Read more »
Read more »
ஆன்ட்டிபயாடிக் விஷயத்தில் அறியாமை வேண்டாம்!
கடந்த சில வருடங்களில் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியானது வெகுவாகக் குறைந்து வருகிறது. காரணம், நோய்க்கான உண்மையான காரணம் தெரியாமல் மக்கள் தாமாக செய்து கொள்கிற சுய மருத்துவம். குறிப்பாக ஆன்ட்டிபயாடிக் உபயோகிப்பதில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற மக்களின் அறியாமை.
Read more »
Wednesday, 23 July 2014
முதுகுவலியினை நாமே தடுக்கலாம்
• வாரத்தில் ஒரு நாளாவது உடல் முழுக்க எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். உடலில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து குளிக்கும்போது ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் எலும்பு மூட்டுகளில் உயவுத்தன்மை குறையாமலும் பார்த்துக்கொள்ள முடியும்.
Read more »
குதிகால் வெடிப்பை போக்க சில டிப்ஸ்
எலுமிச்சை மற்றும் உப்பு ஒரு அகன்ற பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் எலுமிச்சை சாறு, உப்பு, கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, அதில் பாதங்களை 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் மெருகேற்ற உதவும் கல்லைக் கொண்டு குதிகாலைத் தேய்க்க வேண்டும். இந்த முறையை தினமும் இரவில் தூங்கும் முன் செய்தால், குதிகால் வெடிப்பில் இருந்து விடுபடலாம்.
Read more »
கர்ப்பப்பை இறக்கம் கவனம் தேவை
இப்போதைய மாறி வரும் பழக்க வழக்கங்களால், அடி இறக்கம் என்று பெண்களால் கூறப்படும் கருப்பை தளர்வு பல பெண்களுக்கு ஏற்படுகிறது. கர்ப்பப்பை இறக்கம் ஏற்பட என்ன காரணங்கள், அதன் அறிகுறிகள், தீர்வுகள், தடுப்பு முறைகள் பற்றி பார்க்கலாம்…
Read more »
Tuesday, 22 July 2014
“இளைத்தவனுக்கு எள்ளைக்கொடு":
எள்ளில் உள்ள எண்ணெய் சத்துக்கள் உடல் மெலிவாக இருப்பவர்களை குண்டாக்கும் தன்மையுடையது என்பதற்காகவே இந்த பழமொழி கூறப்படுகிறது.
Read more »
Sunday, 20 July 2014
கொழுப்பு கட்டிகள் ஆபத்தானவையா?
கொழுப்பு கட்டிகள் ஆபத்தானவையா?
கொழுப்புக் கட்டிகள் என்பன நம் உடலின் தோலிற்கு உள் சிறு சிறு பஞ்சு போன்ற கொழுப்பாலான கட்டிகளைக் குறிக்கும். இந்த கட்டிகளுக்கு மற்றுமொரு பெயர் கழலை இவை அடிபோஸ் (Adipose) வகை கொழுப்புகளால் ஆனவை. இதனை மருத்துவ ரீதியாக ஆங்கிலத்தில் Lipoma என சொல்லப்படுகின்றது.
Read more »
Saturday, 19 July 2014
மலச்சிக்கல் தீர பல எளிய யோசனைகள்
உலகில் உள்ள அனைவரும், தங்கள் வாழ்நாளில் ஒரு தடவையாவது மலச்சிக்கல் வராமல் இருந்திருக்க மாட்டார்கள். மலச் சிக்கலுடனேயே பலர் வாழ்கின்றனர்.
மலச்சிக்கல் மலம் கழிப்பதில் ஏற்படும் கோளாறு. ஒரு நாளுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை மலம் கழித்தல் 'நார்மல்'. மலச்சிக்கல் ஏற்பட்டால் ஒன்று வெளியேறும் மலத்தின் அளவு குறையும். இரண்டாவது பல நாட்களுக்கு மலமே வெளியேறாது. அதுவும் மலம் கழிக்க சிரமப்பட வேண்டியிருக்கும். மலச்சிக்கல் உள்ளவர்கள் எப்போதும் வயிறு (மலக்குடல்) நிறைந்திருப்பது போன்ற உணர்வு இருக்கும். உடலில் பல நாள் கழிவுப் பொருட்கள் தேங்கியிருப்பது ஒரு வித சங்கடத்தை உண்டாக்கும். நாள்பட்ட மலச்சிக்கல் பல கோளாறுகளை உண்டாக்கும்.
மலச்சிக்கல், வயிற்று வலியை உண்டாக்கலாம். மலம் கெட்டிப்பட்டு போவதால் அது வெளியேற கஷ்டமாக இருக்கும். இதனால் வயிற்று வலி உண்டாகும். வாந்தியை உண்டாக்கலாம். பசி இருக்காது. ஜீரண மண்டலத்தில் கடைசி அங்கங்களான மலக்குடல், பெருங்குடலின் மலம் கெட்டிப்பட்டு இறுகி விடும். மலப்பாதையை அடைத்து கொண்டு விடுவதால், மேலும் வரும் மலம் வெளியேற முடியாமல் நின்று விடும். இதனால் தசை இழுப்பு, சுளுக்கு, வலி ஏற்படலாம்.
மலச்சிக்கல் ஒர் உயிர்க்கொல்லி நோயல்ல. அதனால் எப்போதாகிலும் மலம் கழியாது போகுமானாலும், அளவில் குறைந்து கழியுமானாலும் அதற்காகத் பயப்பட வேண்டிய தேவையில்லை. மேலும் ஒன்றிரண்டு நாட்களுக்கு மலம் கழியாது இருந்த பின்னர் கழிக்கின்ற போது மலம் அளவில் மிகுந்து இருக்குமெனவும் எதிர்பார்க்கக் கூடாது. ஏனெனில் உணவின் சக்கை, மலக் குடலிலே ஒரிரு நாட்கள் இருக்க நேரிடும் போது, அதிலுள்ள நீர்ச் சத்து முற்றிலுமாக உறிஞ்சப்பட்டு விடுவதால், மலம் கெட்டிப்பட்டுப் போவதுடன் அளவிலும் குறைந்து விடுகிறது. எனவே இந்த விஷயம் உங்கள் மன அமைதியைப் பாதிக்க வேண்டிய அவசியமில்லை. கழிவு எதுவும் வெளியே வராமல் உள்ளேயே தங்கி இருக்கப் போவதுமில்லை. சேர்ந்தாற் போல் சில நாட்கள் கழிவறைக்குச் செல்லாமல் இருந்தால் கூடக் கவலையுறத் தேவையில்லை. ஆனால் எப்போதும் மலம் கழிப்பதில் சிக்கல் உள்ளவர்களுக்குத்தான் இது பொருந்தும். நாள்தோறும் நேரந்தவறாமல் கழிவறைக்குச் சென்று வருகின்ற ஒருவருக்கு இது போல் நேருமானால் அவர் தனது உடல் நலத்தில் ஏதோ கோளாறு என்பதை உணர்ந்து மருத்துவரை நாடுதலே சரியாகும்.
காரணங்கள்
1. உணவில், உணவின் கொள்ளளவை அதிகரிக்கும் நார்ச்சத்து இல்லாமை
2. இயற்கையாக மலம் கழிக்கும் உணர்வு வந்தும், அதை அடக்கிக் கொள்ளுதல். கழிவுப் பொருட்கள் கோலோனிலிருந்து மலக்குடலுக்கு வந்து அதன் சீத சவ்வுடன் (Membrane) உராயும் போதே, கழிவறைக்கு செல்ல வேண்டுமென்ற உணர்வை மூளை தெரிவிக்கிறது. இந்த உணர்வை பொருட்படுத்தாமல் அடக்கிக் கொண்டே வந்தால், நாளடைவில் இவ்வுணர்வு தோன்றாமலே போய் விடும். பெருங்குடலின் தசை அசைவுகள் பெருமளவில் குறைந்தால் அது Colon Inertia (பெருங்குடல் மந்தம்) எனப்படும். இது தீராத மலச்சிக்கலை உருவாக்கும்.
3. உடலுழைப்பு, உடற்பயிற்சி இல்லாமை, குறிப்பாக வயதானவர்களுக்கு இது பொருந்தும்.
4. அமில எதிர்ப்பு (Antacid) மற்றும் மலமிளக்கி மருந்துகளும் காரணமாகலாம். அலுமினியம் ஹைட்ராக்ஸைட், மனதை சமனப்படுத்தும் மருந்துகள், அயச்சத்து மருந்துகள் இவை அடிக்கடி மலச்சிக்கலை உண்டாக்கும்.
5. பெருங்குடலுக்கு குறைந்த அளவு ரத்தம் பாய்ந்தால், கழிவை வெளியேற்றும் தசை அசைவுகள் பாதிக்கப்பட்டு மலச்சிக்கல் ஏற்படும்.
6. நீர்மச்சத்து குறைந்து போதல். போதுமான அளவு தண்ணீர் குடிக்காமலிருப்பதும் ஒரு காரணம். உடலில் நீர்ச்சத்து குறைந்தால், உடல் கழிவுப்பொருட்களிலிருந்து எல்லா நீரையும் உறிஞ்சிக் கொண்டு விடும்.
7. மலக்குடல் பாதிப்புகள்
8. பால் ஒவ்வாமை
9. அடிவயிறு மற்றும் குதத் தசைகளை 'கன்ட்ரோல்' செய்ய முடியாமல் போதல். இதை Dyschezia என்பார்கள்.
10. மன இறுக்கம் (Stress), மனச்சோர்வு (Depression) போன்றவை தீவிர மலச்சிக்கலை உண்டாக்கும். மனநிலை கோளாறுகளால் வயிறு பாதிக்கப்படும். மூளையில் உள்ள செரோடினின் 'லெவல்' பாதிக்கப்பட்டாலும் மலச்சிக்கல் ஏற்படும்.
11. கீழ்க்கண்ட வியாதிகள் மலச்சிக்கலை உண்டாக்கும். இந்த வியாதிகளால் கழிவுப் பொருட்களின் கோலோன், மலக்குடல், குதம் இவற்றின் வழியே நடக்கும் பயணத்தை தாமதப்படுத்தும். பார்க்கின்சன்ஸ் நோய், குறைந்த தைராயிட் சுரப்பு, ரத்தத்தில் அதிக அளவு கால்சியம், நீரிழிவு, நரம்பு மற்றும் முதுகெலும்பு பாதிப்புகள்.
12. தவறான உணவு, வாழ்க்கை முறை.
அறிகுறிகள்
வயிற்று வலி ஏற்படும். பிரட்டல் ஏற்படலாம். பசி எடுக்காது. சிரமப்பட்டு மலம் கழிப்பதால் குதத்தின் ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு மூலநோய் உண்டாகும். மலச்சிக்கலின் தீவிர பாதிப்பு மூலநோய்.
டைவர் டிகுலர் (Diverticular) வியாதி ஏற்படும். இறுகி, கல் போலான மலத்தால் பெருங்குடலின் சுவர்கள் பாதிக்கப்படும். இதனால் பெருங்குடலில் 'பலூன்' போன்ற 'பைகள்' உருவாகி வீக்கமும், அடைப்பும் ஏற்படும். இது தான் டைவர் டிகுலர் வியாதி.
ஆயுர்வேத சிகிச்சை அணுகுமுறை
ஆயுர்வேதத்தின் படி, ஒரு நாளில், அதாவது 24 மணி நேரத்தில் ஒரு தடவையாவது மலம் கழிக்காவிட்டால், அந்த கோளாறு மலச்சிக்கல்.
உணவு உண்ட நேரத்திலிருந்து 16 லிருந்து 24 மணி நேரத்துக்குள், அது ஜீரணமாகி, மீந்த கழிவு வெளியேற வேண்டும். கழிவை பெருங்குடல், மலக்குடலுக்கு 'தள்ளி' அது மலத்தை வெளியேற்ற வேண்டும். இந்த கழிவை "ஆமா" என்கிறது ஆயுர்வேதம். அனைத்து நோய்களின் காரணம் மலச்சிக்கலே என்று இயற்கை சிகிச்சை முறை கூறுகிறது.
இயற்கையின் உந்துதல்களை ஆயுர்வேதம் 'வேகம்' என்கிறது. மலவேகம் தடைப்பட்டால் ஏற்படும் உபாதைகளை ஆயுர்வேதம் கீழ்க்கண்டவாறு விவரிக்கிறது.
கீழ்க்காலின் கெண்டச் சதையில் வலி ஏற்படும்.
நீர்க்கோர்வை, ஜலதோஷம், தலைவலி அடிக்கடி ஏற்படும்.
வயிற்றில் வாயு (gas) அதிகமாகி, மேல்வயிற்றில் ஏறி "உதர விதானத்தை" (Diaphragm) அழுத்தும். மார்பு வலி இருக்கும்.
மலபந்தம், பார்வை மந்தம், பசியின்மை, வயிற்று வலி உண்டாகும்.
சிகிச்சை முறை
1. அத்திப்பழத்தை (உலர்ந்தவை) தண்ணீரில், இரவில் ஊறவைத்து, காலையில் உட்கொள்ளலாம்.
2. சாப்பிடும் முன்னும் அல்லது பின்னும் பப்பாளி பழத்தை உண்பது மலச்சிக்கலை கண்டிக்கும்.
3. காலையில் உப்பு சேர்த்த வெந்நீரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து குடிக்கலாம்.
4. காலையில் எழுந்திருப்பதற்கு ஒரு மணி முன்பாக விழித்து, 1 - 2 கப் உப்பு கலந்த வெந்நீரை குடித்து மீண்டும் படுக்கச் செல்லவும். இது சுலபமாக மலம் கழிக்க உதவும்.
5. காரட் ஜுஸ்ஸடன் பசலைக் கீரை ஜுஸ், மற்றும் சிறிதளவு எலுமிச்சம் பழ சாறும் சேர்த்து பருகினால் மலச்சிக்கல் நீங்கும்.
உணவின் மூலம்
1. கோதுமை ரொட்டிகளை உண்ணவும். அரிசி உணவை குறைக்க வேண்டும்.
2. நிறைய பச்சை காய்கறிகள், நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை சேர்த்துக் கொள்ளவும். நார்ச்சத்து மலச்சிக்கலுக்கு இயற்கையான நல்ல உணவு மருந்து.
3. நிறைய தண்ணீர் குடிக்கவும்.
4. பொறித்த உணவுகளை தவிர்க்கவும்.
5. வாத பிரகிருதிகளுக்கு நெய்யும், எண்ணையும் நன்மை செய்யும். பெருங்குடலுக்கு எண்ணை பசையை அளித்து, மலம் நகர உதவும்.
6. ஒதுக்க வேண்டிய உணவுகள் / - 'பாட்டில்' பானங்கள், ஜாம், பிரெட், ஐஸ்கிரீம், ஊறுகாய், அப்பளம், சீஸ், 'சமோசா' இவைகளை குறைக்கவும்.
7. சேர்க்க வேண்டியவை:- முழுகோதுமை, பாலிஷ் செய்யப்படாத அரிசி உலர்ந்த திராட்சை, அத்தி, மாதுளை, ஆப்பிள், வாழைப்பழம் போன்றவை. பீன்ஸ், முள்ளங்கி, கேரட், காலிஃப்ளவர், முட்டைகோஸ், வெங்காயம், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகள்.
8. ஜீரகம், மிளகு, மஞ்சள், தனியா, பெருங்காயம் - இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
9. உணவை வாயில் அதிகமாக மென்று அரைத்தால் ஜீரணமாவது சுலபம்
10. காலை உணவை தவிர்க்க வேண்டாம்.
மூலிகைகள்
ஆயுர்வேதம் கிட்டத்தட்ட 600 மூலிகை களை பரிந்துரைக்கிறது மலச்சிக்கலுக்கு விரிவான வைத்தியம் ஆயுர்வேதத்தில் கிடைக்கும். நீங்களாகவே வைத்தியம் செய்து கொள்ளாமல் ஆயுர்வேத வைத்தியரை அணுகவும்.
இதோ சில மூலிகைகள்.
1. வில்வம் (Aegle marmelos) பொதுவாக பழங்கள் மலச்சிக்கலை தவிர்க்க உதவும். அவற்றில் சிறந்தது வில்வ பழம். நல்ல மலமிளக்கி. காயை விட பழுத்த பழம் ஏற்றது. குடல்களை கழுவும். 2-3 மாதங்கள் உபயோகிக்க வேண்டும். ஒரு நாளுக்கு 60 கிராம் பழம் போதுமானது. சாப்பிடும் முன் எடுத்துக் கொள்ளலாம்.
2. சரக்கொன்றை, கொன்னை (Cassia Fistula) கொன்னை மரத்தின் பழக்கதுப்பு மலச்சிக்கலை குறைக்கும் மலமிளக்கி. பக்க விளைவுகள் இல்லாதது.
3. ஆமணக்கு (Ricinus Communis) பழங்காலத்தில் நம் வீடுகளில் கடைப்பிடித்த விளக்கெண்ணை மருத்துவம். பாதுகாப்பானது.
4. கடுக்காய் (Terminala Chebula) இது ஒரு குறைந்த வீர்யம் கொண்ட மிருதுவான மலமிளக்கி. இதன் கதுப்பை கல் உப்பு, அல்லது இலவங்கம், கிராம்பு (சிறிய அளவில்) இவற்றுடன் உண்ண வேண்டும்.
கல்யாணத்தை தள்ளிபோடுபவரா?........முதலில் இதை படிங்க...
தாத்தா பாட்டி காலத்தில் 15 வயதில் திருமணம் செய்வது சதாரணமான விசயம். அதே நம் அப்பா அம்மா காலத்தில் 21 வயதானாலே பெண் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். ஆனால் இன்றைக்கு நன்றாக படித்து கைநிறைய சம்பாதித்தாலும் சரியான பருவத்தில் திருமணம் செய்யாமல் 30 வயதுவரை தள்ளிப்போடுகின்றனர். இது உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது நிபுணர்களின் கருத்து.
Read more »
Friday, 18 July 2014
தொப்பையைக் குறைக்க உதவும் யோகாசனங்கள்!!!
நம் முன்னோர்களின் ஆரோக்கியத்தின் இரகசியம் என்னவென்றால், அக்காலத்தில் எல்லாம் முன்னோர்கள் செய்யும் ஒவ்வொரு வேலையும், அது வீட்டு வேலையானாலும் சரி அல்லது மற்ற வேலையானாலும் சரி யோகாசனங்களுக்கு இணையாக இருந்தது. அதனால் அவர்கள் யோகாசனம் செய்து தான் உடலை கட்டமைப்புடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் இருந்தது.
Read more »
Read more »
இனி வயிற்றில் குழந்தை அசைவதை ஆண்களும் உணரலாம் - வீடியோ இணைப்பு
'காது கொடுத்துக் கேட்டேன், ஆஹா குவாகுவா சத்தம்', எனக் காவல்காரன் படத்தில் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் தோன்றும் ஒரு பாடல் காட்சி உண்டு. இனி ஆண்கள், காது கொடுத்து மட்டும் கேட்க வேண்டியதில்லை. குழந்தை அசைவதை நேராகவே உணரலாம்.
Read more »
Tuesday, 15 July 2014
சர்க்கரை நோய்க்கு மாற்றுத் தீர்வு என்ன?
எனக்கு நீரிழிவு நோய் உள்ளது. தற்போது 66 வயது ஆகிறது. பிராஸ்ட்டேட் சுரப்பி வீக்கம் அடைந்துள்ளது. PSA சுரப்பி 13.5 இருக்கிறது. கடந்த மாதம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதித்தேன், அது 400 இருந்தது. மருந்து சாப்பிட்டு வருகிறேன். இதற்கு ஆயுர்வேதத் தீர்வு ஏதாவது உண்டா?
Read more »
பல் சொத்தை அறிகுறிகளும் அதற்கான தீர்வும்
மனிதனுக்கும் விலங்குகளுக்கும் உள்ள மிகப்பெரிய விஷயம் சிரிப்பு தான்... ஏனென்றால் மனிதர்களுக்கு மட்டுமே இந்த வரத்தை கடவுள் கொடுத்துருக்கார். ஆனா ஓர் மனிதனின் சிரிப்பு அழகா இருக்கணும்னா பற்கள் பளிச்னு இருக்கறதோட வரிசையா இருந்தாதான் அழகா இருக்கும். அப்படி இருக்கும் பற்களை எப்படி பாதுகாக்கலாம்?
Read more »
Monday, 14 July 2014
நீர்ச்சுருக்கு நீங்க வீட்டு வைத்தியம்
சிறுநீர்ப்பாதையில் முள் சொருகியது போல் வலிக்கும். சிறுநீர் சரியாக வெளியேறாது. வலியும் அதிகமாக இருக்கும். சிறுநீர் அளவில் குறைவாக வலியுடன் வெளியேறுவது நீர்ச்சுருக்கு எனப்படும்.இந்த பிரச்சனையை கீழ்கண்ட மருத்துவ குறிப்புகளை கடைபிடிப்பதன் மூலம் குணமாக்கலாம்.
Read more »
கழுத்து கருமை நிறம் மறைய சில வழிமுறைகள்!
சிலர் பார்க்க அழகாக இருப்பார்கள். ஆனால், அவர்களது கழுத்துப் பகுதி மட்டும் கறுத்துப்போய் காணப்படும். வெயிலில் அலைவது கூட இதற்கு காரணமாக இருக்கலாம். அதனால், முகத்திற்கு பயன்படுத்தும் மேக்-அப்பை கழுத்து பகுதிக்கு சேர்த்துப் போடுவது நல்லது. கழுத்து கருமை நிறம் மறைய சில எளிய வழிமுறைகள் இதோ…..
Read more »
Sunday, 13 July 2014
வயதான தோற்றத்தை தரும் கண் சுருக்கத்தை போக்க வழிகள்
நமக்குத்தான் வயதாகிவிட்டதே என்று எண்ணாமல் உற்சாகத்தோடு இருந்தாலே இழந்த இளமையை மீட்டெடுக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். வயதானால் கண்கள் சுருக்கம் ஏற்படுவது இயல்பு. முதுமையில் கண்களுக்கு கீழே கருவளையம் வரும்.
Read more »
Saturday, 12 July 2014
மாதவிலக்கு சுழற்சியை முறைப்படுத்தும் பப்பாளி
பெண் குழந்தைகளைப் பெற்ற எல்லா அம்மாக்களுக்கும், தன் குழந்தையின் பூப்பெய்தும் பருவம் குறித்த கவலை நிச்சயம் இருக்கும். வரக்கூடாத வயதில் வந்துவிடுகிற மாதவிலக்கும் சரி, வர வேண்டிய வயதில் வராத மாதவிலக்கும் சரி…
Read more »
Tuesday, 8 July 2014
சினைப்பைக் கட்டிகள் இருப்பதற்கான அறிகுறிகள்!!!
பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் எனப்படும் சினைப்பை கட்டிகள்/கருப்பை கட்டிகள். இந்த பிரச்சனையானது பெண்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதிலும் இந்த பிரச்சனையால் டீனேஜ் பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில்
Read more »
லேப்டாப்-பை மடி மீது வைத்து பயன்படுத்தினால் ......
தற்போது தமிழக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பெரும்பாலான நேரம் லேப்டாப்பில்தான் செலவாகிறது. அப்படி மடியின் மீது லேப்டாப்பை அதிக நேரம் வைத்துப் பயன்படுத்துவதால் ஏதேனும் பிரச்னை வருமா? –
Read more »
Monday, 7 July 2014
இளமையை மீட்டுத்தரும் கடலைமாவு மாஸ்க்!
கோடை வெயிலினாலும், தூசுக்களினாலும் சருமம் அதிகம் பாதிப்பிற்குள்ளாகிறது. கூந்தலும் மாசடைந்து வறண்டு விடுகிறது. சருமம், கூந்தல் பாதிப்பினால் முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றுவதோடு பொலிவு குன்றிவிடும். இழந்த அழகை மீட்க வீட்டில் அன்றாடம் சமைக்கப் பயன்படுத்தப்படும் பொருட்களே போதுமானது. கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு போன்ற பொருட்களை உபயோகப்படுத்தி முகத்தையும், சருமத்தையும் அழகாக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.
Read more »
வயிற்றுப் போக்கினால் அவஸ்தைப்படுறீங்களா? இந்த உணவுகளை சாப்பிடாதீங்க
அனைவருமே தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது வயிற்றுப் போக்கால் அவஸ்தைப்பட்டிருப்போம். இவ்வாறு வயிற்றுப் போக்கு ஏற்படுவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அவற்றில் பொதுவாக குடலியக்கத்தில் ஏதேனும் காயங்களோ அல்லது வேறு ஏதாவது பிரச்சனைகளோ ஏற்பட்டால் வயிற்றுப் போக்கு உண்டாகும். மேலும் பலர் உணவுகளால் வயிற்றுப் போக்கிற்கு ஆளாகியிருப்பார்கள். உதாரணமாக, காரமான உணவுகள், கடலைப் பருப்பு போன்றவற்றால் கூட சிலருக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டிருக்கிறது.
Read more »
மெனோபாஸ் என்றால் என்ன?(ஆண்கள் அவசியம் படிக்கணும்)
45 வயதுக்கு மேல் ஆன உங்க மனைவியிடமோ
அல்லது உங்க அம்மாவிடமோ ஒரு திடீர் மாற்றத்தை காண்கிறீர்களா?..
“ரொம்ப எரிஞ்சு எரிஞ்சு விழறாங்க..”
Read more »
Sunday, 6 July 2014
கர்ப்பப்பை கட்டி பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
பெண்களுக்கு கர்ப்பப் பையில் கட்டி ஏற்படுவது மிகவும் சதாரணமான ஒன்றே. குழந்தையை கர்ப்பபையில் சுமக்கும் காலத்தில் யூட்டரின் ஃபைபராய்ட்ஸ் என்று அழைக்கப்படும் இவ்வகை கட்டிகள் தோன்றுகின்றன.
கருப்பை கட்டிகள் பொதுவாக புற்றுநோய்க் கட்டிகளாக மாறும் என்று கருதப்படுவதில்லை. பல நேரங்களில் இந்த கட்டிகள் ஆபத்தானவை அல்ல என்றே மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
Read more »
Saturday, 5 July 2014
லிப்ஸ்டிக் போடும் போது கவனிக்க வேண்டியவை
வெள்ளை நிற பெண்கள் ஆரஞ்ச், சிவப்பு, பிரவுன் உள்ளிட்ட நிறத்தில் லிப்ஸ்டிக் தேர்ந்தெடுக்கலாம். மாநிறமாக இருக்கும் பெண்கள் லைட் பிரவுன்,
லைட் செர்ரி நிற லிப்ஸ்டிக் தேர்ந்தெடுக்கலாம்.
Read more »
அடர்த்தியான மீசையைப் பெற உதவும் சில வழிகள்!!!
ஆண்களுக்கு அழகே மீசை தான். அதிலும் முறுக்கு மீசை வைத்துள்ள ஆண்களைத் தான் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். அதுமட்டுமல்லாமல் இந்த ஸ்டைல் ஒரு பிரபலமாக இருந்தது. மேலும் ஆண்கள் முறுக்கு மீசை வைத்தால், அவர்கள் கம்பீரமான தோற்றத்துடன் காணப்படுவார்கள். அப்படி கம்பீரமான தோற்றம் இருந்தால், பெண்களை எளிதில் கவரலாம். ஏனெனில் பெண்களுக்கு நல்ல கம்பீரத்துடன் இருக்கும் ஆண்களைத் தான் பிடிக்கும்.
Read more »
Friday, 4 July 2014
ஆல்கஹால் குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சனைகள்!!!
ஆல்கஹால் அருந்துவதால் கல்லீரலில் நோய் மற்றும் வாகனங்களில் இருந்து விழுந்து காயங்கள் ஏற்படுவது போன்ற முதன்மையான பிரச்சனைகள் எழுகின்றன என்பது இரகசியம் கிடையாது. மேலும் நீங்கள் ஈரல் நோயும், சாலை விபத்துகளும் தான் ஆல்கஹாலால் ஏற்படும் விளைவுகள் என்று நீங்கள் நினைத்தால், தயவு செய்து உங்கள் நினைப்பை மாற்றிக் கொள்ளுங்கள். 60 வியாதிகளுக்கும் மேலானவை ஆல்கஹால் சாப்பிடுவதால் வரும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
Read more »
சிக்கன் விங்ஸை மட்டும் தயவு செய்து சாப்பிடாதிங்க!! ஏன்னா அதுல....
சிக்கனை பிடிக்காதவர் எவரும் இருக்க முடியாது. அசைவ பிரியர்களுக்கு சிக்கன் ஒரு பிடித்தமான உணவு. நம் உடலுக்கு தேவையான வைட்டமின்களும், கனிமங்களும் சிக்கனில் அதிக அளவில் இருந்தாலும் கூட, அவை நமக்கு சில சமயங்களில் தீங்கை விளைவிக்கும் என்பது நம்மால் மறுக்க முடியாது.
Read more »
Thursday, 3 July 2014
நீங்கள் ஹெட்போனை அதிக நேரம் உபயோகிப்பவரா?
ஹெட்போனைக் காதில் மாட்டிக்கொண்டு, யாரிடமாவது பேசிக்கொண்டோ அல்லது பாடல்களைக் கேட்கும் பழக்கமோ உண்டா உங்களுக்கு? வாங்க, கொஞ்சம் மனசுவிட்டுப் பேசலாம்.
Read more »
நீங்க சரியான நேரத்துக்கு சாப்பிடுவதில்லையா? இதை படிங்க
உண்ணும் உணவை காலதாமதமாக உட்கொண்டால் உடலில் கொழுப்பு சத்து அதிகமாகிவிடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். சரியான நேரத்தில் உணவு உட்கொண்டால் மட்டுமே கொழுப்பு சத்துக்கள் எரிக்கப்படும் என்கின்றனர் நிபுணர்கள்.
Read more »
கண்ணாடி போட்டு மூக்கில் தழும்பு வந்துவிட்டதா? இதோ சில டிப்ஸ்...
தற்போது கண்ணாடி அணிபவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இதற்கு காரணம் கண்களுக்கு வேண்டிய சத்துக்கள், உடலில் போதிய அளவில் இல்லாததால், கண்களின் சக்தியானது குறைகிறது. ஆகவே அத்தகையவர்கள் நல்ல ஆரோக்கியமான மற்றும் கண்களுக்கு சக்தியைக் கொடுக்கும் உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
Read more »
Wednesday, 2 July 2014
அதென்ன நார்ச்சத்து ? அதன் பயன்கள்தான் என்ன?
நார்ச்சத்து, தானியங்கள், காய்கறிகள் இவற்றில் உள்ள செரிக்க கடினமான பொருள். ஜீரண மண்டல உறுப்புகளால் இவை ஜீரணிக்க முடியாததால், நார்ச்சத்து “கிடைக்காத கார்போ ஹைடிரேட்ஸ்” என்றும் சொல்லப்படுகிறது. சுருக்கமாக சொன்னால் நார்ச்சத்து என்றால் உணவின் முழுமையாக ஜீரணிக்க முடியாத பகுதி. அப்படியானால் இதனால் என்ன பலன்? அதைச் சொல்லுமுன், நார்ச்சத்தை பற்றிய சில விவரங்களை தெரிந்து கொள்வோம்.
Read more »
கடுமையான ஒற்றைத் தலைவலியா? இந்த உணவுகளை சாப்பிடுங்க...
பொதுவாக இந்த தலைவலி ஏற்படுவதற்கு நரம்பு மண்டலத்திற்கும், வாஸ்குலார் மண்டலத்திற்கும் இடையே உள்ள செயல்பாட்டில் ஏற்படும் ஒருவித மாற்றம் காரணம். அதுமட்டுமின்றி மூளை செல்களில் ஏற்படும் ஒருவித வித்தியாசமும் தலைவலியை உண்டாக்கும். இந்த மாதிரியான தலைவலியை குறைக்க பல வழிகள்.
Read more »
Tuesday, 1 July 2014
ஹாஃப் குக் செய்யப்பட்ட புரோட்டா, சப்பாத்திகளை வாங்கி பயன்படுத்தலாமா?
கடைகளில் ஹாஃப் குக் செய்யப்பட்ட புரோட்டா, சப்பாத்திகளை வாங்கி பயன்படுத்தலாமா? அவசரத் தேவைக்கு எப்போதாவது ஒருமுறை பயன்படுத்தலாம்.
Read more »
மருத்துவக்குணம் வாய்ந்த 11 உணவுகள்
உணவானது வயிற்றை நிறைப்பதற்கு மட்டும் தான் என்பதில்லை. இந்த உணவு தான் ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய சக்தியைக் கொடுக்கிறது. இந்த சக்தியைக் கொடுக்கும் உணவுகள், உடலுக்கு பலத்தை கொடுப்பதோடு, உடலை பல நோய்களை தாக்காமலும் பாதுக்காக்கிறது. உணவுகள் என்றால் அனைவரும் பிடித்த உணவுகளை மட்டும் தான் சாப்பிடுவார்கள். சில உணவுகளில் ருசி இல்லாவிட்டாலும், அவற்றில் தான் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
Read more »
Subscribe to:
Posts (Atom)